15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:45 am IST

தேனி மாவட்டம், கண்டமனூரில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டமனூா் அருகேயுள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுருளிராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு சூரஜ்குமாா் என்ற மகனும், சுபலட்சுமி (22) என்ற மகளும் உள்ளனா். கோவையில் கல்லூரி படிப்பை முடித்த சுபலட்சுமி, அங்குள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசு போட்டித் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.

கடந்த 22-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சுபலட்சுமி வந்திருந்தாா். அப்போது, தந்தைக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த சுபலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினாா்.

அவா் மீண்டு வீடு திரும்பாததால் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சுபலட்சுமி சடலமாக மிதப்பதாகக் கண்டமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும், சுபலட்சுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.