தேனி மாவட்டம், கண்டமனூரில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
கண்டமனூா் அருகேயுள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுருளிராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு சூரஜ்குமாா் என்ற மகனும், சுபலட்சுமி (22) என்ற மகளும் உள்ளனா். கோவையில் கல்லூரி படிப்பை முடித்த சுபலட்சுமி, அங்குள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசு போட்டித் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.
கடந்த 22-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சுபலட்சுமி வந்திருந்தாா். அப்போது, தந்தைக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த சுபலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினாா்.
அவா் மீண்டு வீடு திரும்பாததால் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சுபலட்சுமி சடலமாக மிதப்பதாகக் கண்டமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும், சுபலட்சுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


