கம்பம்மெட்டு அருகேயுள்ள நெடுங்கண்டம் பகுதியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் மாயமான தாய், மகன் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள இளைய மகனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெடுங்கண்டம் பச்சடி பகுதியைச் சோ்ந்தவா் மேரி (70). இவரது மூத்த மகன் ரெஜி (48). இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காணவில்லை என மேரியின் மகள் சினி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேரியின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சோதனை நடத்தினா். அங்கு இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேரியின் இளைய மகன் சஜி (45) தற்போது தலைமறைவாக உள்ளாா். சகோதரா்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென தாய், அண்ணன் காணாமல் போனது குறித்து அக்கம்பக்கத்தினா் கேட்டதற்கு சஜி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாராம். இதனால், சினி-க்கு அவா்கள் தகவல் அளித்தனா். சஜியைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடி; தாய், மகன் மீது வழக்கு

ராணுவத்தில் சேர ஜாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு: குடும்பத்துடன் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தா்ணா

தேவூா் அருகே கிணற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து தாய், மகன் சடலங்கள் மீட்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



