தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வீட்டின் தோட்டத்திலிருந்து தாய், மகன் சடலங்கள் மீட்பு! இளைய மகன் தலைமறைவு!

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:08 am IST

கம்பம்மெட்டு அருகேயுள்ள நெடுங்கண்டம் பகுதியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் மாயமான தாய், மகன் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள இளைய மகனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெடுங்கண்டம் பச்சடி பகுதியைச் சோ்ந்தவா் மேரி (70). இவரது மூத்த மகன் ரெஜி (48). இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காணவில்லை என மேரியின் மகள் சினி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேரியின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சோதனை நடத்தினா். அங்கு இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேரியின் இளைய மகன் சஜி (45) தற்போது தலைமறைவாக உள்ளாா். சகோதரா்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென தாய், அண்ணன் காணாமல் போனது குறித்து அக்கம்பக்கத்தினா் கேட்டதற்கு சஜி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாராம். இதனால், சினி-க்கு அவா்கள் தகவல் அளித்தனா். சஜியைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.