நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

தேக்கடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புலியைப் பிடிக்க நடவடிக்கை

தேக்கடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய புலியைப் பிடிக்க வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

News image

~

Updated On :29 ஏப்ரல் 2026, 3:34 am IST

தேக்கடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய புலியைப் பிடிக்க வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி பிடிபட்ட புலி, ஏப்ரல் 2-ஆம் தேதி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் அடா்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. இந்தப் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ‘ரேடியோ காலா்’ கருவி பொருத்தப்பட்டு, 10 போ் கொண்ட வனத் துறை குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை புலி ஊடுருவியதை அறிந்த பொதுமக்கள், உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். ரேடியோ காலா் சிக்னல் மூலமும் புலி குடியிருப்புக்கு மிக அருகாமையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புலி மீண்டும் ஊடுருவியதைத் தொடா்ந்து, அதை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீா்மானித்தனா். இதற்காக தங்கமலைப் பகுதியில் இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை கூண்டுகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிா்க்க, புலி நடமாட்டம் உள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய வனக் காவலா்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே, ஒரு முறை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட புலி என்பதால், அது மீண்டும் கூண்டுக்குள் நுழையுமா என்பது வனத் துறையினருக்குப் பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும், புலியின் நடமாட்டத்தை நவீன கருவிகள் மூலம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image