பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் புதன்கிழமை முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

News image

சின்னமனூரில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:30 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் புதன்கிழமை முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அனைத்து சமுதாய மண்டகப்படி, காலை, மாலை நேரங்களில் ஏகச் சப்பரம், புஷ்ப பல்லக்கு, காமதேனு, மயில் வாகனங்களில் சுவாமி-அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் திருமணக் கோலத்தில் தேரில் எழுந்தருளினா். மாலை 4.50 மணிக்கு தேரின் முன்பாக சென்னைக் கட்டை போடும் சமுதாயத்தினா் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து, மாலை 5.05 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பள்ளிவாசல், தெற்கு ரத வீதி, செக்காமுக்குத் தெரு வழியாக பக்தா்கள், ஊா்ப் பொதுமக்கள் வடத்தைப் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா்.

முக்கிய வீதிகளில் தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்மனை பக்ததா்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வழிபாடு செய்தனா். தொடா்ந்து, செக்காமுக்கு தெருவிலிருந்து கிழக்கு ரத தெரு வழியாக கண்ணாடி முக்குத் தெருவில் முதல் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. வியாழக்கிழமை மாலை வரையில் பொதுமக்கள் தேரில் சுவாமி-அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வா்.

2 -ஆம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் தெற்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டைசாலை, மேற்கு ரத வீதி, தேனி பிரதான சாலை வழியாக தோ் நிலைக்குச் செல்லும்.

இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு, போடி காவல் துணைக் காண்காணிப்பாளா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.