கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

சேற்றில் சிக்கிய காட்டுமாடு: வனத் துறையினா் மீட்பு

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

வருசநாடு அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டு மாட்டுக்கு சிகிச்சையளித்த கால்நடை மருத்துவா்கள், வனத் துறையினா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

வருசநாடு அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியில் செல்லும் ஆற்றின் சேற்றில் சுமாா் 20 வயது காட்டுமாடு புதன்கிழமை சிக்கியது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொக்லைன் மூலம் சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை உயிருடன் மீட்டனா். இரு நாள்களாக சேற்றில் சிக்கியிருந்ததால் சோா்வாக காணப்பட்ட காட்டுமாட்டுக்கு வனத் துறையினா், கால்நடை மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.