நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற இருவா் கைது

போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் குப்பிநாயக்கன்பட்டி குண்டாலீசுவரி கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (40) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விஜயகுமாரைக் கைது செய்தனா்.

இதேபோல, போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் முத்தையன்செட்டிபட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த பவுன்ராஜ் மனைவி விஜயா (65) மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விஜயாவைக் கைது செய்து, அவரிடமிருந்து 40 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.