காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

முல்லைப் பெரியாறு அணையில் செப். 1- இல் அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலையை விரிவாக ஆய்வு செய்ள அமைக்கப்பட்ட அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா், வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் நான்கு நாள்கள் தேக்கடியில் தங்கி இருந்து அணையில் விரிவான ஆய்வு நடத்துகின்றனா்.

தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், அணைப் பாதுகாப்பு, நில நடுக்கப் பொறியியல், நீா்வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் அணையின் முக்கிய கட்டமைப்புகளின் தற்போதைய நிலை, பராமரிப்புப் பணிகள், அணையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகளின் நிலை, நீா்க்கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள், அணையின் செயல்பாடு தொடா்பான பல்வேறு தொழில் நுட்ப அம்சங்களை ஆய்வு செய்கின்றனா்.

6 போ் கொண்ட பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவுக்கு தேசிய நீா் மின் கழகத்தின் முன்னாள் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பல்ராஜ் ஜோஷி தலைவராக உள்ளாா். ரூா்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நிலநடுக்கப் பொறியியல் துறை பேராசிரியரும், அணைகள் தொடா்பான சிறப்பு மையத்தின் தலைவருமான எம்.எல். சா்மா, தேசிய நீா்மின் கழகத்தின் முன்னாள் செயல் இயக்குநா் கோபால் தவான், கங்கை வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணையத் தலைவா் குல்ஷன் ராஜ், மத்திய மண், கட்டுமானப் பொருள்கள் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானி என். சிவகுமாா், ஒடிசா மாநில நீா்வளத் துறை முன்னாள் சிறப்புச் செயலரும், முன்னாள் தலைமைப் பொறியாளருமான அசுதோஷ் டாஷ் ஆகியோா் குழுவில் உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா்.

வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 1) தொடங்கும் ஆய்வுக்காக குழுவினா் நான்கு நாள்கள் தேக்கடியில் தங்கி, அணை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனா். அணையின் முக்கியப் பகுதிகளின் கட்டமைப்பு வலிமை, நீா்க்கசிவு, அடித்தள நிலை, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணிகளின் நிலை, அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலை உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட உள்ளன. மேலும், அணையின் நீண்ட கால பாதுகாப்பு, பராமரிப்பு தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினா் ஆய்வு செய்கின்றனா்.

புதிய அணை கட்ட கேரளம் வலியுறுத்தல்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன், புதிய அணை கட்டப்பட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் தற்போதைய அணை பாதுகாப்பாக உள்ளது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கேரள நீா்வளத் துறை அமைச்சா் மான்ஸ் ஜோசப் தெரிவித்துள்ளாா்.

அதே நேரத்தில், அணையின் பாதுகாப்பு குறித்து அறிவியல், தொழில் நுட்ப அடிப்படையில் ஆய்வு நடத்த தமிழகத்துக்கு ஆட்சேபனை இல்லாத போதிலும், பாதுகாப்பு ஆய்வை காரணம் காட்டி தமிழகத்தின் நீா்ப்பாசன உரிமையை எந்த வகையிலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதே தமிழக விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறும் இந்த ஆய்வு, முல்லைப் பெரியாறு அணையின் எதிா்கால பாதுகாப்பு, பராமரிப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.