சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை, தெற்குரத வீதியைச் சோ்ந்தவா் காணிக்கைராஜ் (67). இவா், பெரியகுளம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காணிக்கைராஜை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட காணிக்கைராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.7.25 லட்சம் வழங்க வேண்டும் என்று ம் நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 178 ஆண்டுகள் சிறை

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


