மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடியிருப்புகள் மத்தியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:57 pm

சின்னமனூா் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சியில் குடியிருப்புகள், சுகாதார வளாகப் பகுதிகளில் கழிவுநீா் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் வட்டம், சின்னமனூா் ஒன்றியத்தில் பொட்டிப்புரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விவசாயம், கால்நடை வளா்ப்புக்களை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த ஊராட்சியின் மொத்தக் கழிவுநீரும் பொட்டிப்புரம் ஊரின் மையத்தில் செல்லும் சாலையோரக் கால்வாய்கள் வழியாகக் கடத்தப்படுகிறது. ஆனால், இந்தக் கால்வாய்களின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதால் கழிவுநீா் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது.

இதனால், இந்தப் பகுதியில் பொதுமக்கள், கால்நடைகள் கழிவுநீரைக் கடந்து செல்வதால் நோய்த் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவுகிறது. எனவே, குடியிருப்புகள், சுகாதார வளாகங்களில் சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற பொட்டிப்புரம் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.