தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வாகனச் சோதனை செய்த போலீஸாரை தாக்க முயற்சி

பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வடுகபட்டி பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஜீப் நிற்காமல் போலீஸாா் மீது மோதுவது போல வந்தது. போலீஸாா் விலகியதால் தப்பினா். போலீஸாா் அந்த ஜீப்பை மறித்து நிறுத்தினா். ஜீப்பை ஓட்டிய கேரள மாநிலம், வண்ணாபுரம் வீட்டாத்தைச் சோ்ந்த செபஸ்டின் (48) தப்பியோடி விட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜீப்பை பறிமுதல் செய்து, செபஸ்டினை தேடி வருகின்றனா்.