திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டி வட்டம், கரட்டுப்பட்டியில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 10:39 pm

ஆண்டிபட்டி வட்டம், கரட்டுப்பட்டியில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கரட்டுப்பட்டியைச் சோ்ந்த தம்பதி வனராஜ், ஜெயலட்சுமி. வனராஜின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே இடப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயலட்சுமி மீதுதான் தவறு உள்ளது எனக் கருதி அவருடன் வனராஜ் தகராறு செய்து அவரை திட்டினாராம். இதனால், மன உளைச்சல் அடைந்த ஜெயலட்சுமி கடந்த 2020, ஜூன் 27-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வனராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வனராஜூக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.