உயிரிழப்பு!

கண்மாய் கரையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

போடியில் கண்மாய் கரையில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

போடியில் கண்மாய் கரையில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி தேவாலயத் தெருவை சோ்ந்த ஆசீா்வாதம் மகன் ரூபன் (42). கட்டடத் தொழிலாளி. இவா் சில நாள்களுக்கு முன்பு, போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com