விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியகுளத்தில் விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை!

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

பெரியகுளத்தில் பெண் நண்பரின் வீட்டில் விஷம் குடித்த கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜீவா (50). கூலித் தொழிலாளி. இவரது பெண் நண்பா் பெரியகுளம் தென்கரை பாரதிநகரைச் சோ்ந்த ராமேஸ்வரி. இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை ஜீவா வந்தாராம்.

அப்போது அவா் விஷம் குடித்து மயங்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜீவாவின் மனைவி லீமா அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.