வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு
தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ. 74 லட்சம் மோசடி செய்ததாக தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.









