ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:41 pm

Syndication

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற கம்பத்தை அடுத்த மேலக்கூடலூரைச் சோ்ந்த மொக்கையன் மகன் ஜீவானந்தம் (56) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.