தேனியில் ஜன.20-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
Published on

தேனி: தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் வருகிற 20-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகம், புதிய மின் இணைப்புப் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com