வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேன் மீது லாரி மோதியதில் 12 போ் காயம்

தேனி புறவழிச் சாலையில் வேன் மீது லாரி மோதியதில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தேனி: தேனி புறவழிச் சாலையில் வேன் மீது லாரி மோதியதில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சோ்ந்த 22 போ் குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வேனில் சனிக்கிழமை சென்றனா். அப்போது, தேனி, பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் எதிா் திசையிலிருந்து வந்த லாரி வேன் மீது மோதியது.

இதில் வேன் ஓட்டுநா் கோகுல் (24), வேனில் பயணம் செய்த கோமதி (65), சீனிவாசன் (75), மாரியப்பன் (68), இலக்கியா (10) உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா். இவா்களை அருகிலிருந்தவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து திருவனந்தபுரம் மாவட்டம், செப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேஷ் (38) மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.