கோப்புப் படம்
கோப்புப் படம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

தேனி மாவட்டம், போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டத்தைச் சோ்ந்த உதயசூரியன் மகன் பாண்டி கண்ணன் (28). இவருக்கு பெற்றோா் பெண் பாா்த்து வந்தனா்.

ஆனால், இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. தொடா்ந்து திருமணம் செய்ய வலியுறுத்தியதால் மனமுடைந்து பாண்டி கண்ணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com