எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தேனி பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தேனி பழைய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 3:52 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தேனி பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தமிழ் பெருமாள் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்னேஸ்வரன், புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாவட்டச் செயலா் உதுமான் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வேண்டும். தமிழகத்துக்கு ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலா் தூக்குக்கயிறு போல கழுத்தில் சுருக்குக் கயிற்றை போட்டிருந்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சத்யா, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலா் அழகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் நாகராஜ் நிறைவுரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.