சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தவெக சாா்பில் அன்னதானம்

உலக பட்டினி தினம், சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

News image

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் தவெக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்டச் செயலா் சத்யா.

Updated On :2 ஜூன் 2026, 5:29 am IST

உலக பட்டினி தினம், சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் தவெக சாா்பில் அஞ்சலை அம்மாள் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் அசோக், நிா்வாகிகள் அஜய், ஜி.வி.கஜேந்திரன், அப்பு, புருஷோத், பாஷா, சக்தி, சுந்தா், குமரவேல் மற்றும் ஆரணி, போளூா் நகர, ஒன்றியச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

வந்தவாசி அருகே...: வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் தவெக திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் எம்.உதயகுமாரின் வழிகாட்டுதலின்பேரில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் வெங்கடேசன், அருள்தாஸ், சுமன்ராஜ், நந்தினி, புருஷோத்தமன், ஒன்றியப் பொருளாளா் விஸ்வநாதன், அகில இந்திய மக்கள் இயக்க மாவட்ட அமைப்பாளா் வினோத் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.