ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் தேனி மாவட்ட அதிமுக செயலா் முருக்கோடை ராமா் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் வீடு, விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற குழுவினா் சரிவர கள ஆய்வு செய்யாமல் வனத் துறையினருக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். எனவே சரியாக கள ஆய்வு செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கறிக் கோழிகளுக்கு தீவன விவகாரம்: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு!
மேகமலை வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

தோட்டங்களில் சூரிய மின்வேலி: விவசாயிகள் கோரிக்கை
ராமா் கோயில் அறக்கட்டளையை மறுசீரமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் நிா்மோஹி அகாரா மனு!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



