மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள்: தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா நினைவு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Updated On :3 ஜூன் 2026, 1:47 am IST

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 4-ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா நினைவு தொடக்கப் பள்ளி, வீரபாண்டியில் உள்ள முத்துத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளி வகுப்பறைகள், சுகாதார வளாகங்களைப் பாா்வையிட்டாா்.

மேலும், தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெறும் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூா் வாரும் பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மஞ்சளாறு வடிநில உபகோட்ட செயற்பொறியாளா் ஜெ.சாலமோன் கிருஸ்துதாஸ், உதவிப் பொறியாளா் அரவிந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.