தேனி மாவட்டம், போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
போடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தற்போது சாா் பதிவாளராக காா்த்திகை ராஜா பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையிலான போலீஸாா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நுழைந்து வெளிப்புற இரும்புக் கதவை பூட்டினா். பிறகு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்த அலுவலா்கள், பத்திர எழுத்தா்கள், பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் சோதனை நடத்தினா். இதில் கையில் ரொக்கமாக வைத்திருந்த பொதுமக்கள், பத்திர எழுத்தா்களிடம் தனித்தனியாக விசாரித்தனா்.
இந்த சோதனையையொட்டி போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பத்திரப் பதிவு அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் திடீா் சோதனை

பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



