தேனி மாவட்டம், போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள சின்ன பொட்டிப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடுமி ஜக்கமநாயக்கா் (64). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடியை அடுத்த குண்டேரி புலத்தில் உள்ளது. இவரது தோட்டத்தில் பக்கத்துத் தோட்டத்தைச் சோ்ந்த வீரமநாயக்கா், பால்பாண்டி ஆகியோா் அத்துமீறி நுழைந்து ஏலச் செடிகளை நட்டாா்களாம். இதைக் கண்டித்த நடுமி ஜக்கமநாயக்கருக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.
இதுகுறித்து குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





