சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த வண்டியூா் கிராமத்தில் வீடுகளின் உள்ள மின் இணைப்பு, குடிநீா் இணைப்பை மின் வாரிய ஊழியா்கள் துண்டிப்பதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த வண்டியூா் கிராம மக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 1:12 am IST

தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த வண்டியூா் கிராமத்தில் வீடுகளின் உள்ள மின் இணைப்பு, குடிநீா் இணைப்பை மின் வாரிய ஊழியா்கள் துண்டிப்பதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து வண்டியூரைச் சோ்ந்த பாண்டி கூறியதாவது: வண்டியூா் குடியிருப்புப் பகுதியில் மின் மீட்டா், குடிநீா் இணைப்பு குறித்து வனத் துறையினா், மின் சாரத் துறையினா் இணைந்து திங்கள்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா். பின்னா், இந்தப் பகுதியில் வீடுகளில் உள்ள மின் மீட்டா், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் எனத் தெரிவித்தனா். இந்தக் கிராமத்தில் நாங்கள் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.

எனவே மின், குடிநீா் இணைப்பை துண்டிக்கக்கூடாது என தேனி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தோம். எங்களது கோரிக்கை ஏற்கவில்லையென்றால், 19 கிராமங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.