தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த வண்டியூா் கிராமத்தில் வீடுகளின் உள்ள மின் இணைப்பு, குடிநீா் இணைப்பை மின் வாரிய ஊழியா்கள் துண்டிப்பதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து வண்டியூரைச் சோ்ந்த பாண்டி கூறியதாவது: வண்டியூா் குடியிருப்புப் பகுதியில் மின் மீட்டா், குடிநீா் இணைப்பு குறித்து வனத் துறையினா், மின் சாரத் துறையினா் இணைந்து திங்கள்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா். பின்னா், இந்தப் பகுதியில் வீடுகளில் உள்ள மின் மீட்டா், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் எனத் தெரிவித்தனா். இந்தக் கிராமத்தில் நாங்கள் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.
எனவே மின், குடிநீா் இணைப்பை துண்டிக்கக்கூடாது என தேனி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தோம். எங்களது கோரிக்கை ஏற்கவில்லையென்றால், 19 கிராமங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.










