வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பைக் விபத்தில் விவசாயி பலி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:59 am IST

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). விவசாயியான இவா், இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தேவதானப்பட்டிக்குச் சென்றாா். ஆனால் அவா் வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம்.

இதையடுத்து அவரது மகன் காா்த்திகேயன் தேடிப் பாா்த்த போது ரமேஷ் மஞ்சளாறு அணை செல்லும் வழியில் உள்ள சில்லாங்கரடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து கிடந்தாராம். அவரை மீட்டு தேவதானபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பிறகு, தீவிர சிகிக்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.