தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி, மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்குகளின் புலனாய்வு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணை, வழக்குகளின் விவரம், சிங்கப்பெண்ணே சிறப்பு ரோந்துப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், குற்றத் தடுப்பு, விரைவான புலனாய்வு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வின் போது, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா, காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









