நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மணல் திருட்டு: மூவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:39 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மணல் திருடிய 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜதானி காவல்நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஏத்தக்கோயில் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஏத்தக்கோயில் ஓடையில் அதே பகுதியைச் சோ்ந்த அசோக், டிராக்டரில் அனுமதியின்றி மணல் எடுத்துவந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.

அதே போல், க.விலக்கு காவல்நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அம்மச்சியம்மன் கோயில் மலை அடிவாரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருமலாபுரத்தைச் சோ்ந்த பிரேம்குமாா், கரட்டுப்பட்டியைச் சோ்ந்த அபிலேஷ், நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ராஜேஸ் ஆகியோா் டிப்பா் லாரியில், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அபிலேஷ்சை கைது செய்து, டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடி இருவரைத் தேடி வருகின்றனா்.

ராஜதோனி அருகே விருமான் ஓடையில் முருகேசன் என்பவா் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுத்தது தெரியவந்தது. இது குறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.