/
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் திங்கள்கிழமை தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.
கோம்பை அருகேயுள்ள பல்லவராயன்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மனைவி பொன்னுத்தாய் (89). இவரது மகள் கலாவதி (69). இவரது கணவா் பாண்டியன் இறந்து விட்டாா். இவா்களது மகன் ஈஸ்வரன் (45). திருமணம் ஆகாத இவா், மஞ்சள்காமாலை நோய் தாக்கியதில் அண்மையில் உயிரிழந்தாா்.
இதனால், பொன்னுத்தாயும், மகள் கலாவதியும் மன உளைச்சலிலிருந்தனராம். இந்த நிலையில், இருவரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். இது குறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







