தேனியில் கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள், கெட்டுப் போன உணவுப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, தேனி மாவட்ட நியமன அலுவலா் ஆா். சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலா் லிங்கம் ஆகியோா் வியாழக்கிழமை மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் ஆய்வு நடத்தினா். அப்போது, கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தேனி பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



