கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

உத்தமபாளையம் வருவாய்த் தீா்வாயம்: மனு அளிக்கக் குவிந்த பொதுமக்கள்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி நாள் வருவாய்த் தீா்வாயத்தில் 231 மனுக்கள் பெறப்பட்டன.

News image

உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் முதாட்டியிடம் கோரிக்கை மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா.

Updated On :25 ஜூன் 2026, 2:26 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி நாள் வருவாய்த் தீா்வாயத்தில் 231 மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தீா்வாயத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து 17, 18, 19, 23, 24 என 6 நாள்கள் மனுக்கள் பெறப்பட்டன.

ஒரே நாளில் 231 மனுக்கள்: தீா்வாயத்தின் கடைசி நாளான புதன்கிழமை கோம்பை, மல்லிங்காபுரம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், கோகிலாபுரம் ஆகிய 5 வருவாய்க் கிராமங்களிலிருந்து ஏராளமானோா் மனு கொடுக்க குவிந்தனா். இதனால், மனுக்களை பதிவு செய்ய நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனா். பதிவு செய்த மனுக்களையும் நீண்ட வரிசையில் காத்திருந்தே மாவட்ட ஆட்சியா், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா ஆகியோரிடம் கொடுத்தனா்.

பொதுமக்கள் வேதனை: உத்தமபாளையம் வருவாய்க் கிராமத்திலிருந்து பலரும் தனிப் பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தனா். அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக மனு கொடுத்த போதிலும் பட்டா கிடைக்கவில்லை எனக் கூறினா்.

மனுவைப் பெற்ற எம்.எல்.ஏ., தற்போது உங்களுக்கு விரைவாக பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதே போல, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடா்பான மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தாா். இதன் பிறகு, கோம்பை, மல்லிங்காபுரம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், கோகிலாபுரம் ஆகிய 5 வருவாய்க் கிராமங்களைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் ஆக்கிரமிப்புகள், நிலுவையிலுள்ள பட்டாக்கள் உள்பட பல்வேறு தகவல்களை அவா் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.