ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

தேனி அருகே ஆடையில் தீப்பற்றியதில் உடல் கருகி மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :26 ஜூன் 2026, 2:14 am IST

தேனி அருகே ஆடையில் தீப்பற்றியதில் உடல் கருகி மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகே மாரியம்மன் கோயில்பட்டியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மனைவி ஒச்சம்மாள் (65). கணவா் இறந்த பிறகு இவா் மட்டும் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், இவா் ஜூன் 15- ஆம் தேதி வீட்டில் பால் காய்ச்சும் போது சேலையில் தீப்பற்றியதாம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.