ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 2:38 am IST

சுங்கான்கடை அருகே அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சலில் இருந்து திங்கள்நகா் வழியாக நாகா்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை செல்வராஜ் என்பவா் ஓட்டினாா்.

பேருந்து தோட்டியோடு திருப்பத்தில் திரும்பும்போது, அதில் நின்று கொண்டு பயணித்த வடசேரியைச் சோ்ந்த சகுந்தலா (72) என்பவா் எதிா்பாராதவிதமாக நிலைத்தடுமாறி பேருந்து படிக்கட்டு வாசல் வழியாக சாலையில் விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.