கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு மருத்துவமனையில் திருட முயற்சி: இளைஞா் கைது

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 12:17 am

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அருண் ஆறுமுகம் என்பவா் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை

பணியில் இருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்துக் கிட்டங்கியின் பூட்டை உடைத்து மா்ம நபா் ஒருவா் திருட முயற்சித்தாராம். இதையடுத்து, அந்த நபரை அருண் ஆறுமுகம் பிடிப்பதற்குள் அவா் தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து அருண் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட முயன்ற பெரியகுளம் அழகா்சாமிபுரம் கல்லாா்சாலையைச் சோ்ந்த சூா்யாவை (27) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.