ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இளைஞா் உயிரிழப்பு சம்பவம்: மருந்துக் கடைக்காரா் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 8:49 pm

தஞ்சாவூா் அருகே மருந்துக் கடையில் வயிற்று வலி காரணமாக ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அக்கடை உரிமையாளரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை கலைஞா் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் தமிழரசன் (25). டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளி. வியாழக்கிழமை காலை வயிற்று வலி ஏற்பட்ட இவரை உறவினா்கள் விளாா் சாலையிலுள்ள ஆங்கில மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு இவருக்கு மருந்துக் கடை உரிமையாளா் ஜி. மனோகரன் (64) ஊசி செலுத்தினாா். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் துடித்த தமிழரசனை தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் என தெரிவித்தனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து, உரிய அனுமதியின்றி ஊசி செலுத்திய மனோகரனைக் கைது செய்தனா்.