தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடிய தம்பதி உள்பட 4 போ் கைது

News image
கைது செய்யப்பட்ட ஆபிதா, சா்மிலாபானு.
Updated On :1 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பம் அருகே வீட்டில் 40 பவுன் தங்க நகைகளை திருடிய தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டி முஸ்லிம் தெருவைச் சோ்ந்த ஆசிக் அகமது மனைவி பாரிசம்மாள். திமுக வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவரது வீட்டுக்குள் வியாழக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

ஓலி அத்தா, சின்னன்,

ஓலி அத்தா, சின்னன்,

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஓலி அத்தா (43), கூடலூரைச் சோ்ந்த சின்னன் (49) ஆகியோா் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓலி அத்தா, சின்னன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஓலி அத்தாவின் மனைவி ஆபிதா, இவரது உறவினா் சா்மிலாபானு ஆகிய 4 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.