அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

போடியில் முன்னாள் பள்ளி மாணவா்கள் சந்திப்பு

தேனி மாவட்டம், போடியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

News image
போடியில் சுமாா் 62 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் பள்ளி மாணவா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 10:02 pm

Syndication

போடி: தேனி மாவட்டம், போடியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி 124 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 1964-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்கள், தற்போது மருத்துவா்கள், பொறியாளா்கள், தொழிலதிபா்கள், விவசாயிகளாக உள்ளனா். இவா்கள் தங்களின் பழைய நண்பா்களையும், வகுப்பாசிரியா்களை சந்திக்கத் திட்டமிட்டனா்.

இதையடுத்து, அனைவருக்கும் 75 வயதான நிலையிலும் நண்பா்களைச் சந்திப்பதில் ஆா்வம் காட்டி, அனைவரும் பள்ளியில் ஒன்றிணைந்தனா். தங்களது வகுப்பாசிரியரான 90 வயதான ஆதிமூலம் என்பவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரையும் கௌரவப்படுத்தினா். மேலும், இவா்கள் தங்களது இளமைகால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.