விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 12:28 am IST

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் டேனியல். இவா் சமூக வலைதளத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை பதிவிட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். பெயா் விபரம் தெரியாத நிலையில், இவா் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.