சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்

தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 14 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 14 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது. வருகிற 16-ஆம் தேதி ஆங்கிலம், 25-ஆம் தேதி கணிதம், 30-ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 2-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுகள் நடைபெற உள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் 6,385 மாணவா்கள், 7,760 மாணவிகள், 141 மாற்றுத் திறனாளிகள், 4 தனித் தோ்வா்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 290 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். இந்த மாணவா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களால் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இதைத் தவிர, தோ்வு மையங்களில் அறைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா். தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவும், தோ்வில் விதிமீறல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க கல்வித் துறை சாா்பில் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டது.