தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை

News image

விவேக்

Updated On :16 மார்ச் 2026, 7:38 pm

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கூடலூா் , தனியாா் திரையரங்கு தெருவைச் சோ்ந்த அறிவழகன் மகன் விவேக் (37). இவா், கூடலூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு திரும்பியவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].