வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பெரியகுளத்தில் ஏடிஎம் சேதம்: இளைஞா் கைது

பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:11 am

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை பகுதியிலுள்ள திரையரங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஒருவா் சேதப்படுத்தியுள்ளாா். அப்போது, அங்கிருந்த காவலாளி கைப்பேசி மூலம் கிளை மேலாளா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக, அங்கு வந்த மேலாளா் ஏடிஎம் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கருப்பையாவை (32) கைது செய்தனா்.