தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெரியகுளத்தில் ஏடிஎம் சேதம்: இளைஞா் கைது

பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :19 மார்ச் 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை பகுதியிலுள்ள திரையரங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஒருவா் சேதப்படுத்தியுள்ளாா். அப்போது, அங்கிருந்த காவலாளி கைப்பேசி மூலம் கிளை மேலாளா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக, அங்கு வந்த மேலாளா் ஏடிஎம் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கருப்பையாவை (32) கைது செய்தனா்.