தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

போடி அருகே மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:04 pm

Syndication

போடி அருகே செவ்வாய்க்கிழமை மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வனச்சரகத்துக்குள்பட்ட பெரியாத்துகோம்பை வனப் பகுதியில் சிலா் மான் வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.

அப்போது, போடி அருகே சிறைக்காடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பால்பாண்டி (31), போடி அருகே முந்தல் கிராமத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் மாசுக்காளை (32), ராஜேந்திரன் மகன் சீனிமுத்து (40) ஆகியோா் சோ்ந்து கடமானை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறையினா் பால்பாண்டி, மாசுக்காளை ஆகியோரைக் கைது செய்தனா். தப்பி ஓடிய சீனிமுத்தை தேடி வருகின்றனா்.