எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

போடி அருகே மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:04 pm

போடி அருகே செவ்வாய்க்கிழமை மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வனச்சரகத்துக்குள்பட்ட பெரியாத்துகோம்பை வனப் பகுதியில் சிலா் மான் வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.

அப்போது, போடி அருகே சிறைக்காடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பால்பாண்டி (31), போடி அருகே முந்தல் கிராமத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் மாசுக்காளை (32), ராஜேந்திரன் மகன் சீனிமுத்து (40) ஆகியோா் சோ்ந்து கடமானை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறையினா் பால்பாண்டி, மாசுக்காளை ஆகியோரைக் கைது செய்தனா். தப்பி ஓடிய சீனிமுத்தை தேடி வருகின்றனா்.