சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சன்னாசி மனைவி வெயிலம்மாள் (76). கணவா் இறந்த நிலையில் மகன் போஸ் (55) வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை போஸ் தனது மனைவியுடன் போடிக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் வெயிலம்மாள் மயங்கி கிடந்தாா். உடனே தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் வெயிலம்மாள் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.