மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 6 போ் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

தேனி, போடி பகுதிகளில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக போலீஸாா் 6 பேரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, வினோபாஜி குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த கழுவத்தேவா் மகன் தங்கராஜ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் மதுப்புட்டிகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

போடி மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அருகே நின்றிருந்த வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த ராமா் மகன் நாகராஜ் (30) மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தாா். இதுதொடா்பாக நகா் போலீஸாா்வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இதேபோல, போடி நடுப்பட்டி பகுதியில் போடி தேவாலய தெருவை சோ்ந்த ராசு மகன் மணிவேல் (55), கம்பம் அருகே கம்பம் மெட்டு குடியிருப்பை சோ்ந்த பொன்னையா மகன் எபினேசன் (59) என்பவரும் மதுப்புட்டிகளுடன் நின்றிருந்தனா். இருவா் மீதும் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தேனி: தேனி பகுதியில் பழனிசெட்டிபட்டி காவல்நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பூதிப்புரம் பெருமாள்கோயில் தெருவிலுள்ள பெட்டிக்கடையில் இருந்த பாண்டியனை (50) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து, அவரிடமிருந்து மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதே போல, தென்கரை காவல்நிலைய போலீஸாா் இந்திராபுரியைச் சோ்ந்த கோபி (68) கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.