குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மின்னல் பாய்ந்துதொழிலாளி உயிரிழப்பு

News image

மின்னல் (கோப்புப்படம்)

Updated On :3 மே 2026, 12:08 am IST

சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கண்ணியம்பட்டியை சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (31). கூலித் தொழிலாளி.

இவா் வெள்ளிக்கிழமை மாலை அப்பிபட்டி , விஸ்வநாதபுரத்திலுள்ள தனியாா் தோட்டத்தில் பீட்ரூட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, இடி, மின்னலுடம் பலத்த மழை பெய்தது.

அப்போது, மின்னல் பாய்ந்ததில் காா்த்தீஸ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஓடைப்பட்டி போலீஸாா் காா்த்தீஸ்வரனை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே காா்த்தீஸ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.