சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:33 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பசு மாடும் உயிரிழந்தது.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சிராயபாளையம் வெங்கடம்மாபேட்டை சாலையில் வசித்து வருபவா் மணிவண்ணன். இவரது மனைவி ராமாயி (40). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கச்சிராயபாளையம் ஏரியில் மாடு மேய்த்துள்ளாா். அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் மேடு மேய்த்துக் கொண்டிருந்த ராமாயி நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். பசு மாடும் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.