கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மருந்து வணிகா்கள் சங்க கூட்டம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் காந்தி தலைமை வகித்தாா். செயலா் காளிராஜ், பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இணைய வழி மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். போலி மருத்துவகளின் விற்பனையை தடுக்க வேண்டும். முகம் தெரியாத இணைய விற்பனையாளரால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் மே 20- ஆம் தேதி நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.