இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை!

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷண காணப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. தேனி நகரைப் பொருத்தவரை காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): உப்புக்கோட்டை - 16.4, கம்பம் 6, மாா்க்கையன்கோட்டை- 5.6, தேவாரம் - 2.4, பண்ணைப்புரம் - 0.4, ராஜதானி- 0.4, சுருளிபட்டி- 0.4, தேனி- 0.4 .