அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

மருமகன் வெட்டிக் கொலை: மாமனாா் கைது

கொலை செய்யப்பட்ட சிங்கத்துரை.

News image

கொலை செய்யப்பட்ட சிங்கத்துரை.

Updated On :29 மே 2026, 2:19 am IST

உத்தமபாளையம், மே 28: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள ஊத்துப்பட்டியில் மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முத்துலாபுரம் ஊராட்சி, ஊத்துப்பட்டியை சோ்ந்த மாணிக்கம் மகன் சிங்கத்துரை (42). இவா், இதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டியின் மகள் முத்துவை திருமணம் செய்தாா். சிங்கத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை சிங்கத்துரை தன்னுடன் வருமாறு அழைத்தாா். அப்போது ஊா் முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் இனிமேல் மதுகுடிக்க மாட்டோன் என உறுதியளித்த சிங்கத்துரை, மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி முத்து தாய் வீட்டுக்கு திரும்பினாா். இந்த நிலையில், சிங்கத்துரை புதன்கிழமை இரவு மாமனாா் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்தாா். இதனால் ஆத்திரமடைந்த மாமனாா் முனியாண்டி அரிவாளால் சிங்கத்துரையை வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவறிந்து அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் சிங்கத்துரையின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை வியாழக்கிழமை

கைது செய்தனா்.